Friday, 1 November 2013

காலை 

இட்லி,வடை,தலைக் குழம்பு  ... ,

மதியம் 

வெள்ளை சோறு,குறும்பாட்டுக் குழம்பு,நாட்டுக் கோழி வறுவல் ...

இரவு 

செரிக்க 

முடக்கத்தான் ரசம், சோறு ...

ஒன்று மட்டும் எப்பொதும்  

செரிக்கமுடிவதில்லை ...

வெடியின் சத்தத்தில்

மடிந்து போகும் 

பட்டாசு தொழிலாளிகள் ...

ஒவ்வொரு தீபாவளியன்றும் .

Saturday, 26 October 2013

தலை தீபாவளி

தைரியமாக

பட்டாசு கொளுத்துபவன்

பயப்படுகிறான் ...

பட்டாசு வெடிக்கும்போது ...

 

Friday, 29 March 2013

புரட்சியின் முதல்வனே...

புரட்சியின் முதல்வனே

அன்னை மரியின் புதல்வனே!

பழமையை புதைத்தவனே

மனிதத்தை விதைத்தவனே !



விண்ணகத்தின் மைந்தனே

மண்ணகத்தின் தேவனே !

அநீதியை அழித்தவனே

அறம் காத்த ஆண்டவனே !


மண்ணில் புதைந்தவனே
 
மரணத்தை வென்றவனே !

சிலுவையின் புனிதனே

உண்மையின்  வெண்மையே ....



உயிர்த்தெழுந்து  வருவாயே

தனி ஈழம் தருவாயே .......!  





  




Friday, 12 October 2012

பாண்டிய மன்னனின் முன்

கண்ணகி உடைத்த

சிலம்பிலிருந்து சிதறிய

முத்தைப் போன்றிருந்தது.

 புதிதாக கட்டப்பட்ட பல்....



அவள் சிரித்த போது ...



Tuesday, 9 October 2012

யாருமே இல்லாத -ஒரு

வனாந்தரத்தில்

உன்னை பார்த்தது போலிருந்தது ...


கல்யாண மண்டபத்தில்

வெற்று இலையுடன் -நீ

பரிமாறுபவரை

உற்றுப்  பார்த்துக்கொண்டிருந்த போது ...
புத்தகம் சுமக்கும்

குழந்தையின் முதுகில்

ஒளிந்து கிடக்கிறது ...


மூட்டை தூக்கும்   

உழைப்பாளியின்  பாரம் ...


உருகும்  மெழுகின் வெப்பம்

விரல்களில் ...



மௌனம் சாதிக்கிறோம்

நீயும் ...நானும் ...



Monday, 1 October 2012

சமீபத்தில் தொலைகாட்சியில் ஒரு விளம்பரம் வருகிறது .


TIDE  வாஷிங் POWDER -பற்றியது


டோபி மாமா என்று சாதி பெயருடன் முடிகிறது .


மீண்டும் வருணாசிரம் வாலை  ஆட்டுகிறதோ.......?