மகரந்த சேர்க்கையில்
புதைந்து கிடக்கும்
ஒரு புதிய
வரவிற்கான விருட்சம்.
தேனீக்களின் சத்தத்தில்
உருவாகின்றது
பல ஆயிரம் சந்ததிகளின்
வம்சத்திற்கான வரவுகள்.
பச்சைக் கிளிகள்
பழம் கொத்தும் சத்தத்தில்
பறந்து செல்கிறது
குருவிகூட்டின் பிஞ்சுகள்.
அடைகாத்தலின் வெம்மையில்
உடைந்து கிடக்கிறது
கோழிக் குஞ்சுகளின் ஓடுகள்.
விழுந்து கிடக்கும்
கன்றின் ஈரத்தில்
சுரந்து கொண்டிருக்கிறது
பசுவின் பால்.
உன்னில் என்னை
தொலைத்துவிட்டதில்
எஞ்சிக் கிடக்கிறது.....
நம் குழந்தையின்
அழுகைக்கான சத்தம்.
thank u mama
ReplyDeletetis is ok for us
we are realy proud about u
thank u
please send election commedy poem
ReplyDeleterealy Maapi
ReplyDeleteis good for Tamil poem.
keep it up