Thursday, 28 April 2011

நாங்கல்லாம்

நான் சொல்றத கவனமா கேளு கோவாலு.


பித்து பிடிச்சி போய்               

நீ சுத்தர விஷயம்

எனக்கு தெரிஞ்சு போச்சு.


எப்படா வரும் எலெக்சன் ரிசல்டுன்னு

எல்லார் வாயையும்

கேசரி கணக்கா கிண்டிகிட்டு வர


காமடியன் ஹீரோவானதையும்

ஹீரோ காமடியானனதையும்

பார்த்த பிறகும் உனக்கு புத்தி வரல .


கனிமொழிய உள்ள தள்ளிடுவாங்கலா

ராஜபக்சாவ தூக்குல மாட்டிடுவாங்கலான்னு

போறவன் காதுல குச்சி விட்டு நோண்டற .


இலைக்கு  எத்தன சீட்டு

சூரியனுக்கு எத்தன வேட்டுன்னு

கர வேட்டிய பார்த்தாலே கதறி அழுவுறே


வேனான்டா கோவாலு


அம்மா கொடநாடு போயாச்சு

ஐயா டெல்லி போறாரு

விஜயகாந்தும்,வடிவேலுவும்

கூத்து கட்ட  போய்ட்டாங்க

கம்யூனிஸ்ட்காரன் ஆளையே காணோம்

வைகோவ பத்தி கேக்காதே


எவன் எப்படி போனா உனக்கு என்னடா கோவாலு


இருக்கவே இருக்கு டாஸ்மாக்கு

போனியா குவாட்டரு வாங்கினியா

ஊத்திட்டு குப்புற படுத்து தூங்குடா .



நீ உன் பொண்டாட்டிகிட்ட அடிவாங்குரத பார்த்து

ரொம்ப நாலு  ஆச்சுடா கோவாலு .
















Thursday, 21 April 2011

புளியாத அப்பமும்,பாஸ்காவும்

அவர் அறையப்பட்டதால்

ஆணிகளின் கூர் அறியப்பட்டது .                  

*

அவர் உயிர் விட்டதால்

சாதா மரம் சாகா வரம் பெற்றது

*

அவர் புதைக்கப்பட்டதால்

கல்லறை குழி கூட  கருவறையானது

*

அவர் உயிர்த்தெழுந்ததால்

இறப்பின் உண்மை பொய்த்துப்போனது

*

ஆனாலும்-

எங்கள் மத்தியில்

இயேசு எப்படி  உயிர்ப்பார்

என்று தெரியவில்லை.


இரண்டுபட்டுக் கிடக்கிறது 

எங்கள் ஊர் கல்லறை...


































Sunday, 17 April 2011

ஆதலினால்

ஒரு பேருந்து பயண நெரிசலில்

கண்டக்டரின் வசவுச் சொல்லுக்கு பயந்து

என் அருகில் வந்து நின்றாய் நீ .

*                                                                                                              

ஜன்னல்கள்  மூடி  இருந்த  பேருந்தில்

என் இதயத்திற்கான கதவை

திறந்துவிட்டாய்  நீ.

*

அலைபாய்ந்த உன் கேசத்தின் நுனி முனை கீறிச் சென்றது

என் விழித்திரையில் தொக்கி நின்ற

உன் தரிசனத்திற்கான  பிம்பத்தை.

*

கிழித்து கொடுக்கப்பட்ட  டிக்கட்டினுள்

என்னையும் சேர்த்து

பத்திரபடுத்திக் கொண்டாய் நீ.

*

யாரேனும்  என்னை சந்தேகிக்கிறார்களோ 

என்று எண்ணுகிற வேளையில்

என்னை சந்தேகித்தாய் நீ

அடுத்த நிறுத்தத்தில் நான்  இறங்கி விடுவேனோவென்று .

*

நீ நின்றுகொண்டிருப்பதை பார்த்து

என் மனம் வலிக்கும் வேலையில்

சொல்லாமலே இறங்கிச்  சென்றாய்

அழுத்தமாய் என் கால்களை மிதித்தபடி.

*

வலிக்கிறது எனக்கு.

எந்தக்  கடையில் செருப்பு வாங்குகிறாய் நீ?

Tuesday, 5 April 2011

நண்பர்களைத் தேடி

அடிக்கடி என்னைத் தேடி

வருவார்கள்  நண்பர்கள் .


வரும்போதெல்லாம்

அவர் வீட்டிலில்லை

என்ற பதில்

மனைவியிடமிருந்து  வரும்.


ஏமாற்றத்துடன் திரும்பினோம்

பதில் வரும் நண்பர்களிடமிருந்து .


நாங்கள் வரும்போதெல்லாம்

நீ ஏன் இருப்பதில்லை வீட்டில்?

எங்கு சுற்றித் திரிகிறாய் ?

கோபம் தாங்கிய கேள்விகள்

மீண்டும் வரும்

நண்பர்களிடமிருந்து


என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்

என்னைத் தேடி

நீங்கள் வரும் வேளையில்

வெளியில் சுற்றித் திரிகிறேன் நான் -


என்  நண்பர்களைத் தேடி ...