Sunday, 17 April 2011

ஆதலினால்

ஒரு பேருந்து பயண நெரிசலில்

கண்டக்டரின் வசவுச் சொல்லுக்கு பயந்து

என் அருகில் வந்து நின்றாய் நீ .

*                                                                                                              

ஜன்னல்கள்  மூடி  இருந்த  பேருந்தில்

என் இதயத்திற்கான கதவை

திறந்துவிட்டாய்  நீ.

*

அலைபாய்ந்த உன் கேசத்தின் நுனி முனை கீறிச் சென்றது

என் விழித்திரையில் தொக்கி நின்ற

உன் தரிசனத்திற்கான  பிம்பத்தை.

*

கிழித்து கொடுக்கப்பட்ட  டிக்கட்டினுள்

என்னையும் சேர்த்து

பத்திரபடுத்திக் கொண்டாய் நீ.

*

யாரேனும்  என்னை சந்தேகிக்கிறார்களோ 

என்று எண்ணுகிற வேளையில்

என்னை சந்தேகித்தாய் நீ

அடுத்த நிறுத்தத்தில் நான்  இறங்கி விடுவேனோவென்று .

*

நீ நின்றுகொண்டிருப்பதை பார்த்து

என் மனம் வலிக்கும் வேலையில்

சொல்லாமலே இறங்கிச்  சென்றாய்

அழுத்தமாய் என் கால்களை மிதித்தபடி.

*

வலிக்கிறது எனக்கு.

எந்தக்  கடையில் செருப்பு வாங்குகிறாய் நீ?

1 comment: