Thursday, 21 April 2011

புளியாத அப்பமும்,பாஸ்காவும்

அவர் அறையப்பட்டதால்

ஆணிகளின் கூர் அறியப்பட்டது .                  

*

அவர் உயிர் விட்டதால்

சாதா மரம் சாகா வரம் பெற்றது

*

அவர் புதைக்கப்பட்டதால்

கல்லறை குழி கூட  கருவறையானது

*

அவர் உயிர்த்தெழுந்ததால்

இறப்பின் உண்மை பொய்த்துப்போனது

*

ஆனாலும்-

எங்கள் மத்தியில்

இயேசு எப்படி  உயிர்ப்பார்

என்று தெரியவில்லை.


இரண்டுபட்டுக் கிடக்கிறது 

எங்கள் ஊர் கல்லறை...


































2 comments: