Thursday, 28 April 2011

நாங்கல்லாம்

நான் சொல்றத கவனமா கேளு கோவாலு.


பித்து பிடிச்சி போய்               

நீ சுத்தர விஷயம்

எனக்கு தெரிஞ்சு போச்சு.


எப்படா வரும் எலெக்சன் ரிசல்டுன்னு

எல்லார் வாயையும்

கேசரி கணக்கா கிண்டிகிட்டு வர


காமடியன் ஹீரோவானதையும்

ஹீரோ காமடியானனதையும்

பார்த்த பிறகும் உனக்கு புத்தி வரல .


கனிமொழிய உள்ள தள்ளிடுவாங்கலா

ராஜபக்சாவ தூக்குல மாட்டிடுவாங்கலான்னு

போறவன் காதுல குச்சி விட்டு நோண்டற .


இலைக்கு  எத்தன சீட்டு

சூரியனுக்கு எத்தன வேட்டுன்னு

கர வேட்டிய பார்த்தாலே கதறி அழுவுறே


வேனான்டா கோவாலு


அம்மா கொடநாடு போயாச்சு

ஐயா டெல்லி போறாரு

விஜயகாந்தும்,வடிவேலுவும்

கூத்து கட்ட  போய்ட்டாங்க

கம்யூனிஸ்ட்காரன் ஆளையே காணோம்

வைகோவ பத்தி கேக்காதே


எவன் எப்படி போனா உனக்கு என்னடா கோவாலு


இருக்கவே இருக்கு டாஸ்மாக்கு

போனியா குவாட்டரு வாங்கினியா

ஊத்திட்டு குப்புற படுத்து தூங்குடா .



நீ உன் பொண்டாட்டிகிட்ட அடிவாங்குரத பார்த்து

ரொம்ப நாலு  ஆச்சுடா கோவாலு .
















No comments:

Post a Comment