Thursday, 16 June 2011

ஈரம்

கொய்யா பழத்தை கொத்த

கிளிகள் வரவில்லை





காய்ந்து கிடக்கிறது

உதடுகள்.........

Monday, 13 June 2011

என்னுள்ளே

அமர்ந்துகொண்டாய்.....



வலிக்கிறது                                                   

என் இதயம்.......





எப்போது இறங்குவாய் நீ?

முரண்

குழந்தை

பலூன்  வூதும்போது
                                                                           
இல்லாத பயம்

நான் வூதும்போது

வந்துவிடுகிறது.


எங்கே வூதும்போதே

அது

வெடித்துவிடுமொவென்று......

சாரல்

என் கண்களில்

வடிந்தது கண்ணீர்..........

                                                                                


உன் கண்கள்

வற்றிப்போனது...............

இனி

எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்று

ஆசைப்பட்டோம் .


                                                                                     

இப்போது

என்னை மறந்து நீயும்...........


உன்னை மறந்து

நானும்..............