Friday, 12 October 2012

பாண்டிய மன்னனின் முன்

கண்ணகி உடைத்த

சிலம்பிலிருந்து சிதறிய

முத்தைப் போன்றிருந்தது.

 புதிதாக கட்டப்பட்ட பல்....



அவள் சிரித்த போது ...



Tuesday, 9 October 2012

யாருமே இல்லாத -ஒரு

வனாந்தரத்தில்

உன்னை பார்த்தது போலிருந்தது ...


கல்யாண மண்டபத்தில்

வெற்று இலையுடன் -நீ

பரிமாறுபவரை

உற்றுப்  பார்த்துக்கொண்டிருந்த போது ...
புத்தகம் சுமக்கும்

குழந்தையின் முதுகில்

ஒளிந்து கிடக்கிறது ...


மூட்டை தூக்கும்   

உழைப்பாளியின்  பாரம் ...


உருகும்  மெழுகின் வெப்பம்

விரல்களில் ...



மௌனம் சாதிக்கிறோம்

நீயும் ...நானும் ...



Monday, 1 October 2012

சமீபத்தில் தொலைகாட்சியில் ஒரு விளம்பரம் வருகிறது .


TIDE  வாஷிங் POWDER -பற்றியது


டோபி மாமா என்று சாதி பெயருடன் முடிகிறது .


மீண்டும் வருணாசிரம் வாலை  ஆட்டுகிறதோ.......?  
இன்று காந்தி பிறந்தநாள் .சன் டிவி-யில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி .  


காந்தி கணக்குல வச்சுக்கலாமா ?


என்னுடைய சந்தேகம் இதுதான் ..........



காந்திய கணக்குல வச்சுக்கலாமா ?